×

விஜய் முதலமைச்சராக பதவியேற்ற 13 நாட்களில் 30க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளன: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: விஜய் முதலமைச்சராக பதவியேற்ற 13 நாட்களில் 30க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளன தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் ‘சட்டம் ஒழுங்கை சரி செய்யாமல் விதவிதமான விளம்பர பரப்புரைகளில் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். தவெக ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது – நயினார் நாகேந்திரன். குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும்? . விளம்பர பரப்புரைகளில் விஜய் ஈடுபடுவது, அவரது அனுபவமற்ற ஆளுமையைத் தான் காட்டுகிறது’ எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Vijay ,Minister ,Nayinar Nagendran ,Chennai ,Chief Minister ,Nayana Nagendran ,Tamil Nayana Bajaj ,President ,Takeka ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகள்...