புதுடெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து அளிப்பவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை பெறுவதற்காக, விளையாட்டுத்துறை இணையதளத்தில் சட்டதிருத்த வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
