ராட்டர்ராம்: சுவிட்சர்லாந்தில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற எம்பி ஹோண்டியாஸ் என்ற சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இந்த தொற்றுப்பரவலில் கப்பலில் இருந்த மூன்று பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் சொகுசு கப்பல் கடந்த 6 நாட்களாக கேனரி தீவுகளில் இருந்து பயணம் செய்து வருகின்றது.
மீதமுள்ள பயணிகள் உடல் முழுவதும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்த ஊழியர்கள் மூலமாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங்களில் அனுப்பப்பட்டனர்.
