சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான். கட்சியில் இப்போது உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான், எங்களின் நோக்கம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
