×

பராமரிப்புப் பணி காரணமாக 12,13ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்

 

திருவாரூர், மே 9: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக வரும் 12, 13ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணி காரணமாக வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Tags : Thiruvarur ,Tamil Nadu Drinking Water and Drainage Board ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்