×

புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 8 பேர் கைது

மயிலம், மே 25: புதுச்சேரியில் இருந்து மயிலம் வழியாக தமிழகத்தில் புதுச்சேரி மதுபாட்டில்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில் நேற்று மயிலம் அடுத்த பொம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வெவ்வேறு வாகனங்களில் அவ்வழியாக வந்த கீழ் சித்தாமூர் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் பிரகாஷ் (32) 22 புதுச்சேரி மதுபாட்டில்கள், செஞ்சி அடுத்த ஒதியத்தூர் கிராமம், ரோடு தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (50,) அதே பகுதியை சேர்ந்த முனியன் மகன் வினோத் (28) ஆகிய இருவரும் 32 பாட்டில்கள், செண்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் ஏழுமலை (43) 10 மதுபாட்டில்கள், மயிலம் அடுத்த கேணிப்பட்டு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (58) மற்றும் அவரது மனைவி லட்சுமி (48), பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் மகன் பூவரசன் (23), முனுசாமி மகன் அருள் (42) 42 மதுபாட்டில்களை கடத்தி வந்ததால் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags : Mayilam ,Pompur ,Puducherry ,Tamil Nadu ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்