×

தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்: முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்

 

புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது:விஜயின் தவெக கட்சியுடன் கூட்டு சேர்ந்ததன் மூலம் காங்கிரஸ் ஒழுக்கக்கேடான செயலை செய்ததோடு, அவருக்குப் பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யாததன் மூலம் அரசியல் முட்டாள்தனத்தையும் செய்துள்ளது.ஆக, தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.

நாங்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு நாம் போட்டியிட்ட 23 தொகுதிகளிலும் நம்மை எதிர்த்து போட்டியிட்ட அதே தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலில் எந்த கட்சியை எதிர்த்து போராடினோமோ அதில், நம்முடன் சேர்ந்து கடுமையாக போராடிய திமுகவை விட்டு விட்டு தவெகவுடன் கை கோர்த்தது பயங்கரமானது.

இந்த முடிவில் ஒருவித அரசியல் சாதுரியமும் அடங்கியுள்ளது. ஏனெனில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால், கூட்டணியின் மற்ற சிறிய கட்சிகளும் விலகிவிடும் என்று நினைத்தது.ஆனால், அவர்களில் யாரும் விலகாததால், நாங்கள் முற்றிலும் ஒரு நிச்சயமற்ற நிலையில் விடப்பட்டுள்ளோம்.விஜயுடன் இணைந்து ஒழுக்கக்கேட்டை நாம் செய்துவிட்டோம்.

ஆனால் அவருக்குப் பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யாத அரசியல் முட்டாள்தனத்தையும் செய்துவிட்டோம். அதனால், தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது. நாம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இது பொது அறிவா, நல்ல அரசியலா, அல்லது நல்ல ஒழுக்கமா? இவ்வகையான சந்தர்ப்பவாத அரசியல் எந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கிறது. இந்த வகையான அரசியலுடன் நம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறு மணிசங்கர் ஐயர் கூறினார்.

 

Tags : Congress ,Thaweka ,Former minister ,Mani Shankar Aiyar ,New Delhi ,Former ,Union ,minister ,Vijay ,
× RELATED நடிகரின் ரூ.30,000 கோடி சொத்து தகராறை...