×

கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிஸ்வஜித் பப்புசோனா என்பவரின் தலைமையில் செயல்படுவதாக கூறப்படும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒரு கும்பலுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் பணமோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள காவல்துறை துணை ஆணையர் சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் வீட்டில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் பிஸ்வாஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவறியதையடுத்து கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் பிஸ்வாஸ் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக ஈடி அதிகாரிகள் லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 

Tags : Kolkata Police Commissioner ,New Delhi ,Enforcement Directorate ,Biswajit Pappusona ,Kolkata, West Bengal ,Ballygunge ,Kolkata ,
× RELATED தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பல்ல, அது...