- எம்.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜபல்பூர்
- பர்கி அணை
- நர்மதா ஆறு
- ஜபல்பூர் மாவட்டம்
- மத்தியப் பிரதேசம்
- காமராஜ்
- கர்குழலி
- தமிழ்வேந்தன்
- புவிந்திரன்
- திருப்பூர் மாவட்டம்
- தாராபுரம் மூவனூர்…
ஜபல்பூர்: மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை(ஏப்.30) தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காமராஜ்(38), அவரது மனைவி கார்குழலி(38), அவர்களின் மகன்கள் தமிழ்வேந்தன்(5), புவிந்திரன்(10), மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூவனூரை சேர்ந்த காமராஜின் அண்ணன் மனைவி சவுபாக்கியா(42), இவரது மகள் இனியா(12), மகன் பி.மயூரன்(8) ஆகிய 7 பேர் உள்பட 44 பேர் படகு சுற்றுலா சென்றுள்ளனர்.
திடீரென சூறாவளி காற்று வீசியதால் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் பலியாகி விட்டனர். 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். படகு விபத்தில் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். கடந்த 4 நாட்களாக மீட்புப்பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று தமிழகத்தை சேர்ந்த காமராஜ் மற்றும் அவரது மகன் தமிழ்வேந்தன் ஆகிய இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
