×

மும்பையில் பாலியல் பலாத்காரம் செய்து 4 வயது குழந்தை கொலை: கொடூர முதியவர் கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது குழந்தை நேற்று மாலை வீட்டில் விளையாடி கொண்டிருந்தது. திடீரென, குழந்தையை காணவில்லை. அதனால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சடலமாக கிடந்தது. உடனே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

மேலும் சிசிடிவி காட்சியை பார்வையிட்டனர். அதில், 65 வயது மதிக்கத்தக்க முதியவர்தான், சிறுமியை தூக்கி சென்றது தெரியவந்தது. இயைதடுத்து அவரை கைது செய்து விசாரித்தனர். இதற்கிடையில், குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குழந்தை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து முதியவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Tags : Mumbai ,Pune ,Maharashtra ,
× RELATED திருவேற்காட்டில் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.59 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது