×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவம் நாளை தொடக்கம்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவம் நாளை தொடங்கி, வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிறமோற்சவ விழா, நாளை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் 3ம் நாள் உற்சவத்தில் கருட சேவை, மே 3ம் தேதி அதிகாலையிலும், 7ம் நாள் திருத்தேர் உற்சவம் மே 7ம் தேதி அதிகாலையிலும் நடைபெறவுள்ளது.

பிரமோற்சவம் நடைபெறும் 10 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள் சாத்தப்பட்டு கருட வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை போன்ற வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, மாட வீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு மற்றும் திருக்குளத்தை சுற்றியும் திருவீதி புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காலையிலும், மாலையிலும் பெரிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு தென்மாடவீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, திருக்குளத்தை சுற்றியும் புறப்பாடு நடைபெறும்.

Tags : Chithirai Brahmotsavam ,Thiruvallikeni Parthasarathy Temple ,Chennai ,Chithirai Brahmotsavam festival ,Brahmotsavam ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தில்...