மதுரை: இஸ்லாமிய சிறுமிக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இந்து தம்பதியினரை நியமித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. குழந்தையின் சொந்த தாயார் தத்துக் கொடுக்க முழுமையான சம்மதத்தை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு மதச்சார்பற்றது என்பதால் எந்த மதத்தை சேர்ந்தவரையும் பாதுகாவலராக நியமிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
