×

மதுரை வழக்கறிஞர்களை புறக்கணித்த உயர் நீதிமன்ற நிர்வாகம்: புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு

மதுரை:வரும் 19ம் தேதி நடைபெறும் மதுரை மாவட்ட புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவை அனைத்து வழக்கறிஞர்களும் ஒருமனதாக புறக்கணிக்க முடிவு செய்து பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் madurai bar association க்கு உரிய அங்கிகாரம் வழங்காமல் விழா நடத்துவதாக பொதுக்குழுவில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(19.04.2026) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; வருகின்ற 19.04.2026 அன்று நமது நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் பாராம்பரியமிக்க நமது சங்கத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் விழாவினை நடத்துவது கவலை அளிக்கின்றது. Bar & Bench நலன்சுருதி, இந்த விழாவினை நமது உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை தவிர்த்திட வேண்டுமென்று இந்த பொதுக்குழுவின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Tags : Madurai High Court ,Madurai ,Madurai district court ,Madurai Bar Association ,Madurai court ,
× RELATED சென்னை அடையாறில் ரூ.245 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்..!!