காங்கயம், ஏப். 6: சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கயம் நகரம் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை முறையாக வாக்களிப்பதன் கட்டாயம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் விழிப்புணர்வு பேரணி தேர்தல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் நடந்தது.
தேர்தல் வாசங்களடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி தேர்தல் அலுவலர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
