×

நீடாமங்கலம் பகுதியில் கோடை சாகுபடிக்கு தயாராகும் பாய் நாற்றங்கால்

நீடாமங்கலம், ஏப்.3: நீடாமங்கலம் பகுதியில் கோடை சாகுபடிக்கு தயாராகி வரும் பாய்நாற்றங்கால். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் கடந்த தாளடி சாகுபடி யில் 33,000 ஏக்கரில் தாளடி பணியை முடித்தனர். அதன்பிறகு தற்போது நாற்றங்காலை சீர் செய்து நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டாரில் கோடை சாகுபடி படியை முன் பட்டம், பின்பட்டம் என விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

முன் பட்டத்தில் விவசாய பணியை தொடங்கிய விவசாயிகள் தற்போது நாற்டு பறித்து நடவு செய்து களை எடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தற்போது நாற்றங்காலில் விதை விட்டும், பாய் நாற்றங்கால் அமைத்தும் நடவு பணிக்கு தயாராகி வருகின்றனர். சில இடங்களில் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : Needamangalam ,Tiruvarur district ,Thaladi ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு