- திருவாரூர்
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுக்குழு
- காங்கிரஸ்
- பாஜக
- திமுக…
சென்னை: தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இருந்து இன்று (மார்ச் 31) பரப்புரையை தொடங்குகிறார். இதன்படி இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன்.
மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு, திராவிட மாடல் 2.0-வுக்கு ஆதரவு கேட்டு வருகிறேன். வெல்வோம் ஒன்றாக என்று குறிப்பிட்டுள்ளார்,
