×

சீனிவாச ஆயுர்வேத மருந்தகத்தை ஒரு சிறந்த ஆய்வகமாக மேம்படுத்த வேண்டும்

*தேவஸ்தான இணை செயல் அதிகாரி பேச்சு

திருமலை : சீனிவாச ஆயுர்வேத மருந்தகத்தை ஒரு சிறந்த ஆய்வகமாக மேம்படுத்த வேண்டும் என தேவஸ்தான இணை செயல் அதிகாரி கூறினார்.திருப்பதி அடுத்த சீனிவாச மங்கபுரம் அருகே நரசிங்கபுரத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் சீனிவாச ஆயுர்வேத மருந்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணைச் செயல் அதிகாரி (மருத்துவம், கல்வி) ஏ.சரத் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகம் 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் ஒரு விரிவான மூலிகை மருந்து ஆலையை அமைக்க வேண்டும். நோய்களுக்குத் தேவையான மருந்துகள், அவற்றுக்கு தேவையான தாவரங்கள், தற்போதுள்ள வளங்கள், அத்துடன் வெளியிலிருந்து கொண்டுவரப்படும் மூலிகை செடிகளின் விவரங்கள், ஆகியவை குறித்த ஒரு விரிவான அறிக்கையை தயாரிக்க வேண்டும்.

மேலும், வெளியிலிருந்து வாங்கப்படும் மூலிகை செடிகளை சார்ந்திருப்பதை குறைத்து, மருந்தக நிலத்தில் திட்டமிட்ட முறையில் செடிகளை வளர்க்கவும், தேவையான மூலப்பொருட்களை இங்கேயே சிறந்த தரத்தில் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்தக நிலத்தை முழுமையாக பயன்படுத்தி, மூலிகை மருந்து ஆலையாக மேம்படுத்த வேண்டும்.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு மற்றும் திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ரவிச்சந்திரா ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, தற்போது வளர்க்கப்படும் செடிகள் மற்றும் வெளியிலிருந்து கொண்டுவரப்படும் செடிகள் குறித்த விவரங்களை சேகரித்து, அவற்றை குறைப்பதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

இந்த நிலத்தை ஒரு ஆய்வகமாக மேம்படுத்தவும், இலைகள், வேர்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்ற மருத்துவ பாகங்களுக்கு தேவையான செடிகளை இங்கேயே வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாச ஆயுர்வேத மருந்தகத்தை ஒரு சிறந்த ஆய்வகமாக மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வுக்கு பிறகு, மருந்தகத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் செயல்திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, பல பரிந்துரைகள் வழங்கினார்.அப்போது, ஆந்திர மாநில மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்கள் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.சந்திரசேகர், மருந்தகப் பொறுப்பாளர் ரேணு தீட்சித், எஸ்.இ.நரசிம்ம மூர்த்தி, டி.இ.தாமோதர் மற்றும் மருந்தக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Siniwasa Ayurvedic dispensary ,Devastana ,Action Officer ,Talkhu Tirumalai ,Action ,Officer ,Thirumalai Tirupathi Devasthanathal ,Narsingapura ,Sineivasa Mangapura ,Tirupathi ,
× RELATED திடீர் உடல்நலக் குறைவு: காங்கிரஸ்...