×

கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு: 292 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

 

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக கால்நடை பராமரிப்புத் துறையில், கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 292 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் இந்த ஐந்து ஆண்டு காலத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் 3297 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

Tags : Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Animal Husbandry Department ,Tamil Nadu Public Service Commission… ,
× RELATED மார்ச் 15ம் தேதிக்குள்...