×

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன: உள்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன என உள்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர் தீரஜ் குமார், டிஜிபி வெங்கடராமன், காவல் ஆணையர் அருண் ஆகியோர் அளித்த பேட்டியில், கொலை, ஆதாய கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 1,597ஆக இருந்த கொலை வழக்குகள் தற்போது 461ஆக குறைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக உண்மைக்கு மாறான தோற்றம் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,Home Secretary ,Interior Secretary ,Dhiraj Kumar ,TGB ,Venkataraman ,Commissioner ,Arun ,Chennai Chief Secretariat ,
× RELATED ஓபிசி வருமான வரம்பு தொடர்பான...