- அமெரிக்க அரசுத்துறை
- அமெரிக்கர்கள்
- இஸ்ரேல்
- சவூதி
- துபாய்
- வாஷிங்டன்
- மத்திய கிழக்கு
- ஐக்கிய மாநிலங்கள்
- ஈரான்
- பரம முதல்வர்
வாஷிங்டன் : மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாக குற்றம்சாட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி கூட்டு தாக்குதலை தொடங்கின.இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் வகையில் ஈரான் ராணுவம் இஸ்ரேலை மட்டுமின்றி அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பக்ரைன், ஜோர்டான் மீது ஏவுகணை, டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. 4வது நாளாக இப்போர் தீவிரமடைந்து, விரிவடைந்தும் வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 14 நாடுகளில் வசிக்கும் தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், ஓமன், கத்தார், ஜோர்டான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன், சிரியா நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.மேலும், அமெரிக்கர்கள் வணிக ரீதியிலான விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
