புதுச்சேரி: மாசிமக திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நாளை (மார்ச்.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி வாரியத்தின் தேர்வுகள் தடை இன்றி நடைபெறும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏற்கனவே திட்டமிடப்பட்டடுள்ள போர்டு தேர்வுகள் வழக்கமான அட்டவணையின் படி நடைபெறும், அதில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மாணவர்கள் இந்த தேர்வு அட்டவணையை கவனத்தில் கொண்டு இந்த விடுமுறை உத்தரவை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

