×

தொடங்கிய சுட்டெரிக்கும் வெயில் காரணாம்பாளையம் அணைக்கட்டு காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

கொடுமுடி, பிப்.16: ஈரோடு மாவட்டம் வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் உஸ்மான். இவரது மகன் ரகுமான்(25). இவர் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சிவா ஆகியோருடன் காரணாம்பாளையம் அணைக்கட்டில் நேற்று மதியம் குளித்தனர். அப்போது ரகுமான் ஆற்றின் பாறையில் வழுக்கி விழுந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரகுமானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tags : Kaviri River ,Kodumudi ,Sheikh Usman ,Vettukatu Valasu ,Erode district ,Rahuman ,Kartik ,Shiva ,Fakraampalayam Dam ,Raguman ,
× RELATED கடலூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2000 டன் நெல் மூட்டைகள்