×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக வரும் தண்ணீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டம்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

 

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வரக்கூடிய கூடுதல் தண்ணீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக நகராட்சி துறைஅமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் இருந்து ஊத்துகோட்டை பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியை ஊரக வளர்ச்சி துறை மேற்கொண்டு வருகின்றனர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக வரும் 250 எம்எல்டி தண்ணீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது’ என பதில் கூறினார்.

 

 

 

 

Tags : Lake Serrambakkam ,Minister ,K. N. Nehru ,Chennai ,Municipal Minister ,Tamil Legislative Assembly ,Kummidipundi ,Assemblyman ,D. J. Govindarajan ,Kannakottai ,
× RELATED ஸ்வெலெக்ட் எனர்ஜி நிறுவனம்: எரிசக்தி துறையில் புதிய அடையாளம்