×

திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

சென்னை: வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ‘‘ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்! அறம் – பொருள் – இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்’’
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : Valluvar ,Thiruvaluvar's Day ,First Minister ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,Thiruvalluvar ,
× RELATED சட்டவிரோதமாக இயங்கி வந்த 242 ஆன்லைன்...