ஈரான்: ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் வலுக்கும் நிலையில் நாடு முழுவதும் இணையதள சேவை முடக்கியுள்ளது. ஈரானின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறை போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் இணையதள சேவை முடக்கம். தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனை சுற்றிய நகரங்களில் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா கமைனிக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
