×

பர்னிச்சர் கடை மேலாளர் மீது மோசடி வழக்கு

ராஜபாளையம், ஜன.26: ராஜபாளையம் - தென்காசி ரோடு ஸ்டேட் பேங்க் எதிரில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவரது கடையில் மேலாளராக திருவில்லிபுத்தூரை சேர்ந்த செல்வராஜ் வேலை செய்து வந்தார். கடை கணக்குகளை சரிபார்த்த போது, இவர் கடந்த ஓராண்டில் ஒன்பது லட்ச ரூபாய்க்கும் மேலாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்துவிட்டு 7 லட்ச ரூபாய்க்கும் குறைவாகவே வரவு, செலவு வைத்தது தெரிய வந்தது. மேலும் மூன்று லட்ச ரூபாய் வரை மோசடி செய்து ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து கடை மேலாளர் செல்வராஜ் மீது ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடை உரிமையாளர் மாரிமுத்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : furniture store manager ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு