×

இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவு!

 

டெல்லி: மறு அறிவிப்பு வரும்வரை இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவு அளித்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்காசிய நாடான ஈரானில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வன்முறையாக மாறியது. இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, இந்தியர்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் இந்திய தகவல் தொடர்பு அதிகாரிகள் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதைதவிர்க்க வேண்டும். மேலும் டெஹ்ரானில் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இணைய தளத்தை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், ஏற்கனவே பதிவு செய்யாமல் இருந்தால், இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Ministry of External Affairs ,Indians ,Iran ,Delhi ,Iran… ,
× RELATED 1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின்...