சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் நசரத்புரம் நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்குகிறார். தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பணத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
