×

மகனை அடித்து கொன்ற தந்தை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஓவரசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (60) இவரது மகன் வெஸ்லிக்கு (28) கடந்த வாரம் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென மணப்பெண் வெஸ்லியை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் வெஸ்லி மதுபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதைப்போன்று நேற்று அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அப்போது அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து மகனை சரமாரியாக அடித்துள்ளார். அதில் வெஸ்ட்லி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chengalpattu ,Johnson ,Oversanbetta ,Wesley ,
× RELATED பள்ளிபாளையத்தில் கைதியிடம்...