சென்னை: என்னை வளர்த்தெடுத்த கொள்கை ஆசான்களில் ஒருவர் பேராசிரியர் க.அன்பழகன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு புதிய உயரங்களை அடையும் ஒவ்வொரு தருணத்திலும் அவரது நினைவு என்னை ஆட்கொள்ளத் தவறியதில்லை. கொள்கை உறுதியும் கனிவும் நிறைந்த பேராசிரியர் பெருந்தகை ஊட்டிய திராவிட இனமான உணர்வோடு முன்செல்கிறேன், கழகத்தின் தொடர் வெற்றிகளையே அவருக்கு என் அஞ்சலியாக உரித்தாக்குகிறேன்
