×

வாசகர் பகுதி – இல்லம் சிறக்க கோலம்!

நன்றி குங்குமம் தோழி

கோலம் என்றால் அழகு என்று பொருள். கை விரலுக்கு பயிற்சி, கற்பனைத் திறனுக்கு வேலை, நுரையீரலுக்கு நன்மை, இடுப்பு, கால் எலும்புகளுக்கு வலிமை, ஞாபகத் திறனுக்கு ஊக்குவிப்பு என பல நன்மைகள் இந்த கோலமிடுவதால் ஏற்படுகிறது.தினமும் கோலமிட, நம் இல்லமும், உள்ளமும் சிறக்கும்.

*சின்ன கோலமிட்டாலும் நேர்த்தியாக, ஒரே சீராக இழை இழையாக கோலமிட, பார்க்க நன்றாக இருக்கும்.

*புள்ளிகளை கலர் மாவில் வைத்து பின் வெள்ளை மாவில் கோலமிட எளிமையாக கலர் கோலமாக போட்டு விடலாம்.

*புள்ளி வைத்து பின் கோலத்தை விரிவுப்படுத்தி போட ரங்கோலி நேராக, கோணலின்றி அழகாக வரும்.

*தற்போது ரங்கோலி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதைக் கொண்டு போட, அழகாக பளிச்சென்று இருக்கும்.

*கோலமிட்டதும் கோலத்தை சுற்றி பார்டர் இட அழகாக இருக்கும். புள்ளி சிக்கு கோலமெனில், பூக்கோல பார்டரும், பூக்கோலமெனில் சிக்கு போல பார்டரும் இட அழகாக இருக்கும்.

*செம்மண் பார்டர் கொடுக்க எல்லா கோலங்களும் பளிச்சென்று இருக்கும்.

*மாக்கோலம் போடும் போது, வெள்ளை மாவு ஒரு பாகம், சிவப்பு, பச்சை, மஞ்சள் என கலர் கலந்து தனித்தனியே எடுத்துக் கொண்டு, கோலத்தை கலரில் வரைய காய்ந்ததும் சூப்பராக இருக்கும்.

*ஸ்பாஞ்ச் வைத்துக் கொண்டு மாக்கோலமிட, அழகாக வரும்.

*கூடிய வரை தெய்வப்படங்கள், தெய்வ சின்னங்களை தரையில் போடுவதை தவிர்க்கலாம். பூஜை அறையில் போட நன்றாக இருக்கும்.

*சாணம், பூசணிப்பூ கிடைக்கவில்லை என்றால், பஞ்சகவ்ய விளக்கு வைத்து பெங்களூர் ரோஜாவை கிழமைக்கேற்றவாறு வைத்து அழகுபடுத்த சூப்பராக இருக்கும்.

*அபார்ட்மென்ட் வீடெனில் ஸ்டென்சில், கோல ஸ்டிக்கர் வைத்து கோலமிட்டு கலரிட அழகாக இருக்கும்.

தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

Tags : Kumkumam ,
× RELATED வாசகர் பகுதி – இல்லம் சிறக்க கோலம்!