நாமக்கல், ஜன.19: நாமக்கல் எம்பி சின்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை நிலைக்குழுவின் உறுப்பினர்களின் ஆய்வுகூட்டம் நேற்று செங்கல்பட்டில், ஊரக வளர்ச்சித்துறை நிலைக் குழுவின் தலைவர் பிரதாப்பிராவ் கண்பத்ராவ் ஜாதவ் தலைமையில் நடைபெற்றது. இதில் சின்ராஜ் எம்பி கலந்து கொண்டார். கூட்டத்தில், மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் நடைபெற்று பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில் வங்கியின் பங்களிப்பு குறித்து இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிஉயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.