டெல்லி : தமிழ்நாட்டில் 100% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தால் குழப்பம்
புதுச்சேரியில் நடைபெறும் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்த தேர்தல் ஆணைய புள்ளி விவரத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில் 5 பேரை தவிர அனைவருக்கும் எஸ்.ஐ.ஆர். படிவம் விநியோகம். கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட 4 படிவங்கள் யாருடையது என்பது குறித்த தகவல் இல்லை.
தமிழ்நாட்டில் 100% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றம்
தமிழ்நாட்டில் 100% எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வெறும் 815 பேருக்கு மட்டுமே எஸ்.ஐ.ஆர். படிவம் தரவில்லை
6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டன. இன்னும் 551 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. 6.41 கோடி வாக்காளர்களில் வெறும் 815 பேருக்கு மட்டுமே எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்படவில்லை. 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 பேரிடம் பெறப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 551 எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன.
மத்திய பிரதேசத்தில் கூடுதலாக 146 படிவங்கள் பதிவேற்றம்
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் விநியோகிக்கப்பட்ட படிவங்களை விட 146 படிவங்கள் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் விநியோகிக்கப்பட்ட படிவங்களை விட 146 படிவங்கள் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
