சென்னை: தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லாரிகளுக்கு உயர்த்திய எஃப்.சி. கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல். சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் 95% வாகனங்கள் ஓடாததால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
