×

நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்எஸ்ஐ பலி

தர்மபுரி: தர்மபுரி குள்ளனூரை சேர்ந்தவர் தமிழழகன் (56). மதிகோன்பாளையம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ. மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.நேற்று முன்தினம், போலீஸ் ஸ்டேசனுக்கு பைக்கில் சென்றார். வெண்ணாம்பட்டி ஆயுதப்படை போலீஸ் கேண்டீன் அருகே தெருநாய் குறுக்கே சென்றதால், நிலைதடுமாறிய தமிழழகன், பைக்கில் இருந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தமிழழகன் உயிரிழந்தார்.

Tags : SSI ,Kullanur ,Madikonpalayam ,Police Station ,AVANAMBATI ARMED FORCES POLICE ,CANTEEN ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார...