சென்னை: சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்கியது.விமானிகள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில், கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. போதிய அளவுக்கு பைலட்டுகள், விமான பணியாளர்கள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அதிகாலை 3 மணியில் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான சேவை தொடங்கியது. வரும் 10-ம் தேதிக்கு பிறகே இண்டிகோ விமான சேவைகள் சீரடையும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து இன்று 10 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் படிப்படியாக விமான சேவை அதிகரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
