×

வளி மண்டல சுழற்சி காரணமாக வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. இந்நிலையில், வட உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக, நேற்று ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி வரை இதேநிலை நீடிக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Tags : Chennai ,Tamil Nadu ,northern ,
× RELATED கடலூர் மீன்பிடி துறைமுக பகுதியில் இன்று காலை மீன் விற்பனை கலை கட்டியது