×

ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

 

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிறிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தன்னை 2வது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார் என்று ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டாவின் இந்த கூற்றை மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

மனைவியை விவகாரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து, வாழ்வதாக கூறி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என்று கிறிசில்டா தரப்பு கூறியுள்ளது. ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை ஒ செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. என்னுடைய செல்போனில் இருந்த புகைப்பட ஆதாரங்களை மாதம்பட்டி ரங்கராஜ் அழித்துவிட்டார் என்று கிறிசில்டா கூறியுள்ளார்.

ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நான்தான் தந்தை என தெரியவந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார். என்னுடைய நற்பெயரை பாதிக்கும் வகையில் அவதூறான கருத்துகளை கிறிசில்டா வெளியிட்டுள்ளார். என்னை பற்றி அவதூறான வீடியோக்கள் வெளியிட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை நவ.14ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Tags : Joy Crisilda ,High Court ,Monthampatty Rangaraj ,Chennai ,Supreme Court ,Mahampatti Rangaraj ,
× RELATED இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள்...