- Duraimurugan
- வேல்முருகன்
- சென்னை
- பன்ருதி சட்டமன்றத் தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- டி. வேல்முருகன்
- காவிரி
- அந்தியூர்-பவானி
சென்னை: பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பண்ருட்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் பேசுகையில், “காவிரி உபரி நீர் அந்தியூர்- பவானி தொகுதிக்கு செல்லவில்லை. அந்த தொகுதி மக்களுக்கு காவிரி உபரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “அந்தத் தொகுதி மக்களுக்கான கோரிக்கையை கேட்க அந்த தொகுதி உறுப்பினர்கள், அந்த தொகுதி மக்கள் இருக்கிறார்கள். பிற தொகுதி கோரிக்கையை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள். ” என்றார். இதையடுத்து வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. தேவையில்லாத பிரச்னையை பண்ணாதீர்கள் உட்காருங்கள். யாருக்கு கேள்வி கொடுக்கணும்னு எனக்கு தெரியும் உட்காருங்க’ என வேல்முருகனை அமர சொன்னார்.
