×

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!!

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு ஆகஸ்ட் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கில் கைதான 7 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களுக்கும் அபராத தொகையாக தலா ரூ.1.75 லட்சம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டது.

Tags : RAMESWARAM ,FISHERMEN ,Colombo ,Rameshwaram ,
× RELATED சமாதான திட்டம் ஏற்க மறுப்பு ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் அதிருப்தி