×

வேலாயுதம்பாளையம் அருகே பைக்குகள் நேருக்கு மோதல்: 3 பேர் படுகாயம்

வேலாயுதம்பாளையம், ஆக. 14: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் வி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(47). விவசாயி. இவரது மருமகள் சத்யா(18). ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாரிமுத்து, தனது மருமகள் சத்யாவை பைக்கில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கரூர் ஆத்தூர் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் (77). விவசாயி மீது நேருக்குநேர் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Velayudhampalayam ,Marimuthu ,Athipalayam V.N. Puthur ,Noyyal ,Karur district ,Sathya ,Karur Government Medical College Hospital ,Erode-Karur highway… ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் மது விற்ற 2பேர் கைது: மாவட்ட கலெக்டர் தகவல்