×

4 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு…! பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா

பெங்களூரு: பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27-ந்தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு காரணமாக, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி, அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆனார். ஆனாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்கள் அறிவுரையின்படி, பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தங்கி ஓய்வு எடுத்தார். இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனபோது சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையானது. பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்ட சசிகலா தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் காரில் இருந்தவாறே அவர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, போரூர் வழியாக வரும் அவர் ராமாவரத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு வருகிறார். அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத்தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்துக்கு சசிகலா வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வழிநெடுக திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். காரில் இருந்தபடியே கட்சியினரின் உற்சாக வரவேற்பை சசிகலா ஏற்றுக்கொள்கிறார்….

The post 4 ஆண்டுகள் சிறைவாசம் நிறைவு…! பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Chennai ,Bangalore ,Bengaluru ,Devanahalli ,Bengaluru Jails ,Dinakaran ,
× RELATED சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து