×

வேலூர் கோர்ட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு கொலை வழக்கில் குற்றவாளிகள் சரண் தகவலால்

வேலூர், ஜூலை 8: வேலூர் கோர்ட்டில் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைவதாக வந்த தகவலால் நேற்று காலை முதல் திடீரென போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் கோர்ட் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் மீது கொலை முயற்சி நடந்தது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.. இந்த வழக்கு தொடர்பில் உள்ளவர்கள் வேலூர் கோர்ட்டில் நேற்று சரணடைய உள்ளதாக தகவல் பரவியது. அதன்பேரில் காலை 8 மணி முதல் சத்துவாச்சாரி கோர்ட் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்தனர். கோர்ட்டுக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து அனுமதித்தனர். ஆனால் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் திண்டிவனம் கோர்ட்டில் சரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் கோர்ட்டில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அங்கிருந்து சென்றனர். முன்னதாக வேலூர் கோர்ட்டின் அனைத்து பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் காலை முதல் பரபரப்பு நிலவியது.

The post வேலூர் கோர்ட்டில் திடீரென போலீஸ் பாதுகாப்பு கொலை வழக்கில் குற்றவாளிகள் சரண் தகவலால் appeared first on Dinakaran.

Tags : Saran ,Vellore court ,Vellore ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...