×

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை

விருத்தாசலம், ஜூலை 30: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி செல்லக்கிளி(37). கண்ணதாசன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், செல்லக்கிளி தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் செல்லக்கிளி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் செல்லக்கிளியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் செல்லக்கிளியை பலமாக தலையில் தாக்கி விட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டார். இதையடுத்து வெளியில் சென்று விட்டு வந்த அவரது தாய் செல்லக்கிளி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து செல்லக்கிளியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர் யார், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Vrudhachalam ,Chellakkali ,Netaji Street, North Periyar Nagar, Vrudhachalam, Cuddalore district ,Kannadasan ,
× RELATED மான் வேட்டையாடியவர் கைது