×

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு

திண்டிவனம், ஏப். 28: திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் சிலம்பரசன் என்கின்ற ராஜா(35), இவர் நேற்று மாலை 6 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவில் உள்பக்க தாழ்ப்பால் போட்டுவிட்டு, பக்கவாட்டில் உள்ள கதவை பூட்டிவிட்டு, தீவனூரில் நடைபெறும் உறவினரின் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் அவரது உறவினரும் அதே வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது பக்கவாட்டில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு, சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தார்.

சிலம்பரசன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்து 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Thindivanam ,Dinakaran ,
× RELATED திண்டிவனம் அருகே சாலை நடுவில் வேன் கவிழ்ந்து 14 பேர் காயம்..!!