×

விராலிமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

விராலிமலை, ஜூன்13: விராலிமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள். வாகன ஓட்டிகள், வணிகர்கள் அவதி அடைந்து வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் கழிவு நீர் செல்ல முறையான வழி இல்லாததால் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழி நீர் கடந்த பத்தாண்டுகளாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் வணிக கடைகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதை தொடர்ந்து கழிவு நீர் செல்லும் வாய்காலை முறைபடுத்தி சாலையில் செல்லும் கழிவு நீரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விராலிமலை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து 15வது மாநில நிதிக்குழுவில் இருந்து சுமார் 12.70 லட்சம் மதிப்பீட்டில் 211 மீட்டருக்கு புதிய வடிகால் அமைக்கப்பட்டு பணிகள் 95 சதவீதம் முடிவுற்ற நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை எழுந்து வரும் நிலையில் செயல்பாட்டின் தாமதம் குறித்து விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவியிடம் கேட்டபோது: பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரவேண்டும் என்று தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் தேவைகளை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி வருகிறோம்.

அந்தவகையில் நீண்ட நாள் கோரிக்கையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்க நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கி குறித்த காலத்திற்குள்ளாகவே முடிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் செல்லும் வழித்தடத்தில் இடையே பேருந்து நிறுத்தம் உள்ளது இதனால் வாய்க்காலை இணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது அதுவும் வரும் ஒரு சில நாட்களில் முடித்து வாய்க்கால் இணைக்கப்பட்டு சாலையில் செல்லும் கழிவுநீர் தடுக்கப்பட்டு விடும் என்றார்.

The post விராலிமலை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Viralimalai road ,Viralimalai ,Dinakaran ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள்...