×

விகேபுரம் அருகே மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் வென்ற அணிக்கு பரிசு

 

விகேபுரம்,அக்.7: விகேபுரம் அருகே சிவந்திபுரம் நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான 87ம் ஆண்டு கால்பந்து போட்டி கடந்த 25ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. போட்டியில் திருச்சி, திண்டுக்கல், கோவை, பாளையங்கோட்டை, நெல்லை போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் போட்டியில் நெல்லை ஜாய்ஸ் அணி, கோவை கற்பகம் அணி மோதியது. இதில் திருநெல்வேலி ஜாய்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இசக்கி சுப்பையா எம்எல்ஏ வெற்றி பெற்ற நெல்லை ஜாய்ஸ் அணிக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிர் அணி செயலாளர் இமாகுலேட், வள்ளிமயில் உரிமையாளர் வேம்பு, அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், முன்னாள் கவுன்சிலர் பழனி, தர்மர், மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, வக்கீல்கள் செல்வ அந்தோணி, பொன் ஸ்டாலின், சமூக ஆர்வலர் வில்சன், விளையாட்டு ஆலோசகர் மார்ட்டின், நாடார் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் திரவியக்கனி, செயலாளர் ஜெயராமன், பொருளாளர் மகேஷ், வளர்ச்சி திட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விகேபுரம் அருகே மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் வென்ற அணிக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,annual football tournament ,Sivanthipuram Nadar Sports Club ,Trichy ,Dindigul ,Coimbatore ,Palayamgottai ,Nellai ,Dinakaran ,
× RELATED வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில்...