நீலகிரி: எனது பேச்சு சிலரை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என நீலகிரி எம்பியும், திமுக கழக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பேட்டியளித்தார். மு.க.ஸ்டாலின், பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையையே குழந்தைகளாக உருவகப்படுத்தினேன் என கூறினார். இரண்டு அரசியல் தலைவர்களை அரசியல் ரீதியாக ஒப்பீடு செய்தேன் என தெரிவித்தார்.