×

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கரிகாலன் வாக்குறுதி

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர் ம.கரிகாலன், தொகுதிக்கு உட்பட்ட பதுவஞ்சேரி பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நரிக்குறவர்கள், அவர்களது தலைவர் மகன் திருமண நிகழ்ச்சியில் ஒன்றுகூடி இருந்தனர். அப்போது, கரிகாலன் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்ததை பார்த்த அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். பின்னர், அந்த திருமணத்தை கரிகாலன் தலைமை வகித்து நடத்தி வைத்தார். தொடர்ந்து, அவர்களுக்கு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பற்றி கேட்டதோடு, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டுவந்து முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் தொகுதியை நிச்சயம் மாற்றுவேன். அதற்கு நீங்கள் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார். அதற்கு, அங்கு கூடியிருந்த  நரிக்குறவர்கள் நிச்சயம் உங்களுக்கு வாக்களிப்போம் என உறுதி அளித்ததுடன், அக்கட்சி சின்னமான குக்கரை தூக்கிக் கொண்டு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாம்பரம் சட்டமன்ற தொகுதி தேமுதிக பொறுப்பாளர் ஆனந்தராஜ், அமமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார் உட்பட ஏராளமான அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்….

The post முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கரிகாலன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Mamma People's Advancement Corporation ,Assembly ,Karigalan ,Puduvancheri ,Dinakaran ,
× RELATED கிழக்கு தாம்பரத்தில் நாட்டு...