×

முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

திருச்செங்கோடு, ஜூலை 5: அர்த்தநாரீசுவரர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. விழாவில் இக்கல்லூரியின் செயலரும் அர்த்தநாரீசுவரர் கோயிலின் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடாசலம் வரவேற்று, பேராசிரியர்களை மாணவ, மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசுகையில், கல்லூரியில் உள்ள வசதிகளை மாணவ,மாணவிகள் பயன்படுத்தி, கல்வியை சிறந்த முறையில் கற்று பயனடைய வேண்டும் என்றார்.

The post முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruchengod ,Arthnarishwarar State College of Arts and Sciences ,Ramanikandan ,College ,Assistant Commissioner ,Arthnarishwarar Temple ,Principal ,Venkatasalam ,
× RELATED ₹4.72 லட்சத்திற்கு பருத்தி விற்பனை